மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன்

மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன்
Advertisement
எழுத்து அளவு

தெலுங்கில் பிரபல இயக்குனர் கோபிசந்த் மாலினேனி இயக்க உள்ள படத்தில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்கப் போகிறார் நயன்தாரா. அந்த படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதால், ஹீரோயினும் வெயிட்டாக இருக்க வேண்டும் என நினைத்து நயன்தாராவை புக் பண்ணியிருக்கிறார்களாம். பாலகிருஷ்ணாவின் வயது 65 என்றாலும் மறுபேச்சு இல்லாமல் நயன்தாரா சம்மதித்து இருப்பதாக தகவல்.

ஏற்கனவே சிம்ஹா, ஜெய் சிம்ஹா, ராமராஜ்ஜியம் படங்களில் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார். அதில் அவர் சீதையாக நடித்த ராமராஜ்ஜியம் படம் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. தமிழில் நயன்தாராவை ஹீரோயினாக்க முன்னணி ஹீரோக்கள் முன் வரவில்லை. பெரும்பாலும் அவர் கதையின் நாயகியாக நடிக்கிறார். அதனால், தெலுங்கில் நயன்தாரா கவனம் செலுத்துகிறார். இப்போது சீரஞ்சீவி ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து பாலகிருஷ்ணா படத்தில் நடிக்கப்போகிறார்.

தமிழில் அவர் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகாமல் தவிக்கின்றன. அவர் மூக்குத்தி அம்மன் 2வைதான் பெரிதாக நம்பியிருக்கிறார். தமிழை விட நயன்தாராவுக்கு சம்பளமும் அதிகம் 15 கோடிக்குமேல் சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map