வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது?
எழுத்து
அளவு
விஜய் டிவியில் ஒளிபரப்பான "பகல் நிலவு" மற்றும் ஜீ தமிழ் சீரியலான "றெக்க கட்டி பறக்குது மனசு" ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சமிரா ஷெரீப். பகல் நிலவு தொடரில் தன்னுடன் நடித்த சக நடிகரான சயத் அன்வரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சீரியல் பக்கம் நடிக்க வராத சமீரா அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது நல்லதொரு தாயாக குழந்தையை வளர்த்து வரும் சமீரா, உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார். இதற்கிடையில் அவரை மீண்டும் நடிக்க சொல்லி ரசிகர்கள் வற்புறுத்தி வர, ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அவரது வேகத்தை பார்த்தால் இரண்டே மாதத்தில் பழைய சமீராவாக சீரியலில் கமிட்டாவார் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.