சின்னத்திரையில் ஒரு சினிமா முயற்சி : நெஞ்சத்தைக் கிள்ளாதே அப்டேட்

சின்னத்திரையில் ஒரு சினிமா முயற்சி : நெஞ்சத்தைக் கிள்ளாதே அப்டேட்
Advertisement
எழுத்து அளவு

சின்னத்திரை சீரியல்களுக்கு சினிமாவை விட நல்ல மவுசு கிடைத்து வருகிறது. இந்நிலையில், சீரியலையே சினிமாவை போல் 2:30 மணி நேரம் ஒளிபரப்பு செய்யும் முயற்சியில் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் குழுவினர் இறங்கியுள்ளனர். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நெஞ்சத்தை கிள்ளாதே தொடரில் ஜெய் ஆகாஷ், ரேஷ்மா முரளிதரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள இந்த தொடர் வருகிற செப்டம்பர் 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடந்து 2:30 மணி நேரம் ஒளிபரப்பாகவுள்ளது. சினிமாவில் வருவது போலவே இரண்டரை மணி நேரத்தில் காதல், வில்லன், ஆக்ஷன் என அனைத்து அம்சங்களையும் அடக்கி இதற்கென ஸ்பெஷலாக திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map