ஈரமான ரோஜாவே 2-வில் மீண்டும் இயக்குநர் மாற்றம்

ஈரமான ரோஜாவே 2-வில் மீண்டும் இயக்குநர் மாற்றம்
Advertisement
எழுத்து அளவு

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடர் முதல் சீசனின் அமோக வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரை ஆரம்பத்தில் இயக்குநர் தாய் செல்வம் இயக்கி வந்தார். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதனையடுத்து இந்த தொடரை சுந்தரம் என்பவர் இயக்கி வந்தார். இந்நிலையில், அவரும் தற்போது ஈரமான ரோஜாவே 2 சீரியலிலிருந்து விலகிவிட்டார். இதனை சுந்தரம் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்து சீரியல் குழுவுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். அக்டோபர் 2 ஆம் தேதி முதல் ஈரமான ரோஜாவே தொடரை புதிய இயக்குநர் இயக்கவிருக்கிறார். அவரை பற்றிய தகவல்கள் விரைவில் தெரியவரும்.

Advertisement Dinamalar Subscription Dinamalar Subscription

கருத்து பதிவு செய்ய

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.

மேலும் செய்திகள்

Advertisement
Advertisement

Advertisement
Advertisement
Copyright © 2026 Dinamalar. All rights reserved Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. | Site Map