மீண்டும் வில்லியாகும் பரீனா ஆசாத்
சின்னத்திரை தொகுப்பாளினியான பரீனா, பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் சீரியலில் நடிகையாக என்ட்ரி கொடுத்தார். அந்த தொடரில் வில்லியாக மிரட்டிய பரீனாவின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தது. அதன்பிறகு சில சீரியல்களில் பரீனா நடித்தாலும் அவையெல்லாம் பெரிதாக பேசப்படவில்லை. பாரதி கண்ணம்மா சீசன் 2வும் விரைவாகவே முடித்து வைக்கப்பட்டது. அதன்பிறகு பரீனாவுக்கு சீரியல் வாய்ப்புகள் கிடைக்காததால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில், அவருக்கு மீண்டும் சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‛நினைத்தாலே இனிக்கும்" ஹிட் தொடரில் மீண்டும் வில்லியாக, பழிவாங்கும் பாம்பாக பரீனா என்ட்ரி கொடுத்துள்ளார். அதன் புரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
சின்னத்திரை
யுடியூபில் பிரபலமாகி தற்போது காமெடி நடிகர் ஆகியிருப்பவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த பெருமாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர். தன் வீட்டின் அருகே உள்ள நிலத்தில்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.