அப்போ தெரியலையா? வனிதாவை வெளுத்து வாங்கிய கஸ்தூரி
எழுத்து
அளவு
பிக்பாஸ் வீட்டிலிருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார் பிரதீப் ஆண்டனி. ஆனாலும், வெளியே அவருக்கு பரவலாக ஆதரவு கிடைத்து வருகிறது. சில தினங்களுக்கு முன் பிரதீப்பின் ஆதரவாளர்கள் வனிதா விஜயகுமாரை தாக்கியதில் அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து வனிதாவும் பிரதீப்பும் பேசிக்கொண்டு சமாதானம் ஆகிவிட்ட வாட்சப் உரையாடலும் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் வனிதாவுக்கு தன்னால் அனுதாபம் காட்ட முடியவில்லை என்று கஸ்தூரி கூறியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "அடித்தவர் யாரோ அதற்கு பிரதீப் எப்படி பொறுப்பாக முடியும். தன் ரிவியூவால் வந்த வினை. வனிதாவின் ருசிகரமான பொய்கள் யு-டியூப்புக்கும் விஜய் டிவிக்கும் வேண்டுமானல் கண்டண்டாக பயன்படும். போலீஸிடம் வியாபாரமாகுமா?. நான் இதற்கு அனுதாபம் காட்ட வேண்டும். ஆனால், சனியன் இந்த நேரம் பார்த்து மதுமிதா கையை வெட்டிக்கொண்டு நின்ற போது வனிதாவும் அவரை சார்ந்தவர்களும் மதுமிதாவை சுற்றிவளைத்தது ஞாபகம் வருகிறது. இது வெறும் விளையாட்டு என்பது அப்போது ஞாபகத்து வரவில்லையா? உங்களுக்கென்று இல்லை யாருக்குமே வன்முறை நடக்கக்கூடாது " என்று பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரை
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.