பிக்பாஸில் விஜய்சேதுபதி? - விக்ரமன் கூறிய கருத்து
எழுத்து
அளவு
பிக்பாஸ் சீசன் 8 மிக விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான விக்ரமன் அளித்த ஒரு பேட்டியில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது சரி என நினைக்கிறீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விக்ரமன், "ஒரு முறை பிக்பாஸ் வீட்டிற்குள் சாப்பாடு பிரச்னை வந்தது. அப்போது கமல்ஹாசன் நாம் அனைவரும் உழைப்பது சாப்பிட தான். அந்த சாப்பாட்டை அவருக்கு பஞ்சம் இல்லாமல் கொடுங்கள். வேண்டுமானால் என் சம்பளத்தை குறைத்துக் கொண்டு அந்த பணத்தில் அவர்களுக்கு சாப்பாடு கொடுங்கள் என்று கூறினார். இதுபோல் வேறு யாரும் செய்வார்களா? என்று தெரியவில்ல. விஜய் சேதுபதி வளர்ந்து வரும் நடிகர். அவர் நிகழ்ச்சியை எப்படி கொண்டு செல்கிறார் என்பதை வைத்து தான் கருத்து சொல்ல முடியும். கமல்ஹாசனுக்கே அதிகமான விமர்சனங்கள் வந்தது. அதுபோல விஜய் சேதுபதிக்கு விமர்சனங்கள் வந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவருக்கு இருக்க வேண்டும்" என்று விக்ரமன் கூறியுள்ளார்.
சின்னத்திரை
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.