காதலியுடன் நடனமாடிய பப்லு ப்ருத்விராஜ்
எழுத்து
அளவு
பிரபல சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான பப்லு என்கிற பிருத்விராஜ் கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்தார். தற்போது பப்லுவுக்கு 57 வயதாகிறது. ஆனாலும் வொர்க்-அவுட், பாசிட்டிவான மனநிலை என உடலளவிலும், மனதளவிலும் கட்டுமஸ்த்தாக இளமையுடன் இருக்கிறார். இவருக்கு மலேசியாவை சேர்ந்த 24 வயதே ஆன ஷீத்தல் என்பவருடன் காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் இவர்களது உறவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், சோஷியல் மீடியா பதிவுகளிலும், நேர்காணல்களிலும் தனக்கும் ஷீத்தலுக்குமான உறவு எத்தகையது என்பதை பப்லு விளக்கிவிட்டார். தற்போது ஷீத்தலுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வரும் பப்லு அவருடன் சேர்ந்து ரொமான்ட்டிக்காக நடனமாடி அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்றாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‛காவாலா" பாடலுக்கு இருவரும் நடனம் ஆடி உள்ளனர்.
சின்னத்திரை
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள்
ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம்
கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.