டாக்சிக் : மீண்டும் தள்ளி வைப்பு
எழுத்து
அளவு
கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள கன்னடப் படம் "டாக்சிக்".இந்தப் படம் முதலில் மார்ச் 19ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன்பின் திடீரென ஜுன் 4ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்தார்கள். இதனிடையே, கடந்த சில வாரங்களாக இந்தப் படம் மீண்டும் தள்ளி வைக்கப்படலாம் என்று செய்திகள் வந்து கொண்டிருந்தன.அதை உறுதிப்படுத்தும் விதத்தில் தற்போது மீண்டும் தள்ளி வைத்துள்ளது பற்றி அறிவித்துள்ளார்கள். இருந்தாலும் இந்த முறை படம் எப்போது வெளியாகும் என்று எந்தத் தேதியையும் குறிப்பிடாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமைக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. அதனால் தான் படத்தின் வெளியீட்டை மீண்டும் தள்ளி வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
கோலிவுட் செய்திகள்
தமிழ்த் திரையுலகத்திலிருந்து அரசியலில் இறங்கி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தனிப் பெரும்பான்மை கட்சியாக வெற்றி பெற்றிருக்கிறார் நடிகர் விஜய். தேர்தல் முடிவுகள் வெளியாக
தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களை அறிமுகம் செய்த தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி, ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவருடைய உடல் நல்லடக்கம் சற்று முன் நடைபெற்றது. அவருடைய






கருத்து பதிவு செய்ய
கருத்தை பதிவு செய்ய அல்லது பதிலளிக்க மேலே உள்ள பட்டனை அழுத்தவும். புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே கருத்தை பதிவு செய்யலாம்.